Sep 11, 2009

உறவுகள் தொடர்கதை - குட்டிக் கதை


தன் காதலை வீட்டில் சொல்லிவிடுவதென முடிவெடுத்து, மூச்சை இழுத்துப் பிடித்து முழுதாய் சொல்லி முடிப்பதற்குள் தெருவில் குப்புற விழுந்து கிடந்தான் குமார். சித்தி ராஜி, தன் முழு பலத்தையும் உபயோகித்து அப்பாவை தடுத்து நிறுத்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள்.
நண்பர்கள் உதவியோடு பதிவு திருமணம் முடித்து புது வாடகை வீட்டில் வாழ்க்கையை தொடங்கிய போது, ஆளாளுக்கு ஆறுதல் சொன்னார்கள், "ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகி விடும்" என்று.
சரியாய் ஒரு வருடம் ஆகியிருந்தது. குழந்தை குமாரை உரித்து வைத்திருந்தது. அதன் மழலை சிரிப்பில் மனதைப் பறிகொடுத்த குமாரின் அப்பா, அதன் தலையை வருடிக் கொண்டே சொன்னார்
"நீயாவது நான் சொல்லும் நம் ஜாதி பெண்ணைக் கல்யாணம் பண்ணனும். உங்க அண்ணனை மாதிரி என்னை தலை குனிய வச்சிடாத"

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons