உறவுகள் தொடர்கதை - குட்டிக் கதை

Posted by RV on September 11, 2009 , under | comments (0)



தன் காதலை வீட்டில் சொல்லிவிடுவதென முடிவெடுத்து, மூச்சை இழுத்துப் பிடித்து முழுதாய் சொல்லி முடிப்பதற்குள் தெருவில் குப்புற விழுந்து கிடந்தான் குமார். சித்தி ராஜி, தன் முழு பலத்தையும் உபயோகித்து அப்பாவை தடுத்து நிறுத்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள்.

நண்பர்கள் உதவியோடு பதிவு திருமணம் முடித்து புது வாடகை வீட்டில் வாழ்க்கையை தொடங்கிய போது, ஆளாளுக்கு ஆறுதல் சொன்னார்கள், "ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகி விடும்" என்று.

சரியாய் ஒரு வருடம் ஆகியிருந்தது. குழந்தை குமாரை உரித்து வைத்திருந்தது. அதன் மழலை சிரிப்பில் மனதைப் பறிகொடுத்த குமாரின் அப்பா, அதன் தலையை வருடிக் கொண்டே சொன்னார்

"நீயாவது நான் சொல்லும் நம் ஜாதி பெண்ணைக் கல்யாணம் பண்ணனும். உங்க அண்ணனை மாதிரி என்னை தலை குனிய வச்சிடாத"

December 6

Posted by RV on August 04, 2009 , under | comments (1)



பாண்டியன் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் நீளமான கழிவறையில் தட தடத்துக் கொண்டிருந்தது, மதுரையை நோக்கி . இளைஞர் கூட்டத்தின் ஆல்க்கஹால் உற்சாகம், பச்சைக் குழந்தையின் பால் அழுகை, இடை விடாது தொடரும் பெண்களின் சீரியல் புரணி என ஒவ்வொன்றாய் அடங்கி , நீல நிற இரவு விளக்கு ஒளியில் ஆண், பெண், சாதி மத வேறுபாடின்றி சமத்துவ தூக்கம் அரங்கேறியிருந்த சமயம். கண்களில் பல நாள் அலுப்பும களைப்பும் மிச்சமிருந்தும் நித்திரா தேவி என்னை மட்டும் தழுவ மறுத்தாள்.


எழும்பூர் ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் போலீஸார் அவசரகதியில் மேற்கொண்ட சம்பிரதாய சோதனை எனக்கு திருப்திகரமாக இல்லை. வரிசையில் எனக்கு முன்னே சென்ற ஒரு கணவன் மனைவியை , அந்தப் பெண் கர்ப்பமாய் இருந்த காரணத்தால் சோதனையே செய்யாமல் அவர்களது பெட்டிகளில் 'OK' என்ற ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பினார்கள். ஒற்றைக் கைப்பை கொண்டு வந்த என்னை, மெட்டல் டிடெக்டர் கொண்டு துழாவி, உள்ளிருந்த வீட்டு சாவியால் அது பீப்பிட , சாவியை எடுத்துக் காட்டிய பிறகே ஏதோ தீவிரவாதியைப் பார்ப்பது போல சந்தேகித்துப் பின் அனுப்பினர். எனக்கோ முன்னே சென்ற ஜோடியில், கருப்பு படுதாவிற்குள் இருப்பது முதலில் ஒரு பெண் தானா என்ற சந்தேகம் வேறு மனதின் மூலையில் ஒண்டுக்குடித்தனம் செய்தது. அவர்களை சோதிக்காமல் அனுப்பியது தான் அனுப்பினார்கள், போயும் போயும் அவ்வளவு பெரிய எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் எனக்கு அருகில் தான் வந்து அமர வேண்டுமா? முக்கியமான வேலையாக ஊருக்கு போகும் போது தான் இப்படி சோதனை எல்லாம் வரும்.

இப்போது தெரிகிறதா நித்திரா தேவி என்னைத் தழுவாததன் காரணம் ... உள்ளே பின் லாடனே குடியிருந்தாலும் தெரியாது போன்ற அடர்த்தியான தாடி வைத்திருந்த அந்த ஆசாமி, கருப்பு படுதாவிற்குள் இருந்த மனைவியின் ??!! காதில் அடிக்கடி ஏதோ குசுகுசு வென எனப் பேசிக்கொண்டே வந்தான். கருப்பு அங்கி மிடில் பெர்த்தில் தலை சாய்க்க , அவன் மட்டும் கழிவறை சென்றான். என் மனதிலோ ஆண்டனியின் எடிட்டிங் வேகத்தில் காட்சிகள் தோன்றி மறைந்தன. வெடிகுண்டு பொருத்துவதற்கு சிறந்த இடம் - கழிவறை. கதவைப் பூட்டி விட்டு நிதானமாய் வெடிகுண்டைப் பொருத்தலாம், போலீசுக்கு சந்தேகம் வந்தாலும், நாற்றத்தைத் தாண்டி நாயால் அதை மோப்பம் பிடிக்க முடியாது. உள்ளே போனவன் இருபது நிமிஷமாய் வெளி வராதது கண்டு என் மனம் அவன் தீவிரவாதி தான் என்று தீர்ப்பே சொல்லி விட்டது.

காக்கி களைந்த உளவுத்துறை போலீஸ் போன்ற தோற்றத்தில் இரண்டு பேர் கழிவறைக்கு வெளியே காத்திருந்தார்கள். பரவாயில்லையே ஸ்காட்லாந்து யார்டின் போட்டியாளர்கள் சரியான நேரத்துக்கு வந்து விட்டார்களே என்று சபாஷ் போட்டு , நடப்பதை நகம் கடித்து பார்த்திருந்தேன். போன் பேசியபடி வெளியே வந்த தாடி, அந்த இரண்டு பேரைக் கண்டவுடன் மேலே பாய்ந்து சண்டையிட்டான். தயாராய் இருந்த அவர்கள் அமைதியாய் அவனை எதிர் கொண்டு கைகளை பின்னால் முறுக்கி , ஓடும் ரயிலின் வெளியே தூக்கி எறிந்தனர் .

ஏதோ விபரீதம் என்று மூளை உணர்ந்து செயல்படுவதற்குள் அந்த இருவர் கட்டாக துண்டுப் பிரசுரங்களையும் , உருண்டையான பொருளையும் தூக்கி எறிய, நெருப்பு ஜுவாலை நாட்டியமாடியது .

Related posts:

ராஜ வம்சம் : குட்டிக் கதை

Posted by RV on July 28, 2009 , under | comments (0)



காடு மலைகள் சூழ்ந்த பின்னணியில், அவர்கள் அனைவரும் வரிசையாக கூடியிருந்தனர்.

நான்கு நாட்டின் மக்களும், ராஜ வம்சமும், அமைச்சர்களும் கூடியிருந்ததால் பரபரப்புக்கும் சலசலப்புக்கும் அந்த இடத்தில் பஞ்சமில்லாமல் இருந்தது.

காலம் காலமாய் தொடர்ந்து வரும் நிறப் பாகுபாட்டால் கறுப்பு இனமும், சிவப்பு இனமும் பிளவுபட்டு எதிரெதிர் அணியில் நின்றிருந்தனர்.

கூட்டத்தின் இடையே அவ்வப்போது தன் சேஷ்டைகளாலும் அகடவிகடத்தாலும் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர் கோமாளிகள்.

சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல ராஜா ராணியின் வைரங்கள் ஜொலித்து எதிரணி ராணியின் வயிற்றெரிச்சலுக்கு உரம் போட்டன.

கறுப்பாக இருந்தாலும் களையாக இருந்த ராணிகளைக் கண்டு சிவப்பின ராஜாவின் இதயத்தின் லப்-டப் எகிறிக் கொண்டிருந்தது.

சுற்றிலும் ஆட்கள் சேர்ந்து, நடுவில் காசு பணம் குவியத் தொடங்க, சூடுபிடிக்கத் தொடங்கியது. வரிசை வாரியாக முதலில் சேர்ந்த சிவப்பு வைரம் அணி வெற்றி வாகை சூடி, ரம்மி ராகவனை இன்ஸ்டண்ட் பணக்காரனாக்கியது!


வைகை எக்ஸ்பிரஸ் : சிறுகதை

Posted by RV on July 27, 2009 , under | comments (0)



ந்தூரி அடுப்பில் தகிக்கும் சிகப்பு சிக்கனாக கத்திரி போடும் சித்திரை வெயிலில் வைகை எக்ஸ்பிரஸில் மதுரை நோக்கிப் பயணமானேன். நெற்றியில் இரும்புத்துரு வாசனை நீர் நனைத்த கைக்குட்டை மூன்று முறை நனைந்து காய்ந்திருந்தது. வெளியில் தான் இவ்வளவு வெக்கை என கம்ப்பார்ட்மெண்டில் ஏதாவது பசுமை தேறுமா என்று பார்வையை சுழற்றினால், ஏதோ முதியோர் இல்லத்திலிருந்து கல்விச்சுற்றுலா??!!! அழைத்து வந்தது போல எல்லாம் சீனியர் சிட்டிசன் சலுகையோடு ரயிலேறியவர்கள்!

சும்மாவா பாடினார் இளையராஜா, "ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே" என்று?

ஆலயமணி சரோஜா தேவி தொடங்கி மா..ஆ..ஆ.. ஆ.. சி.. ல்.. லா.. மணி சுனைனா வரை சூடு பறக்கும் அரட்டையில் இருந்தனர் பெரிசுகள்.

நடுநடுவே "அந்த காலத்தில எல்லாம்..." என்ற ஃப்ளாஷ் பேக் வேறு. என் அருகில் இருந்த தாடிக்கார பெரியவர் மட்டும் கருமமே கண்ணாய் தன் தடித்த கண்ணாடி தாண்டி ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.

*

ன்ன தான் மத்திய அரசு உத்தியோகஸ்தனாக இருந்து என்ன பயன்? மத்திய அரசு கொடுத்த சம்பளப் பணத்தை மாநில அரசின் டாஸ்மாக்கில் தாரை வார்த்து வார்த்து, முருகனுக்கு கழுத்து வரை கடன் தொல்லை. கவலை மறக்க கடை திறந்ததும் டாஸ்மாக்கில் சரணடைந்து விஜய் மல்லையாவின் கருணையால்??!! தன் கடன் சுமையை, இந்த உலகத்தையும் தன் பகல் நேர ரயில்வே ட்யூட்டியையும் மறந்தான்.

இருக்கும் ஒரு வழி இருப்புப்பாதையில் எதிரெதிர் வரும் ரயில்களில் ஒன்றை நிறுத்தி, மற்றொன்று கடந்த பின் சிக்னல் கொடுக்கும் கடமை முருகனுக்கு.

சரக்கு ரயிலின் ஓட்டுனருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் கூவல் ஒலி சமீபத்தில் கேட்ட போது தான் ஏதோ தவறு நடந்திருப்பதாக தோன்றியது. தன் வாக்கி-டாக்கியை தேடி எடுத்து பேச விழைவதற்குள், எதிர் வளைவில் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வருவது தெரிந்தது. ரத்தத்தில் அட்ரினாலின் வெள்ளப்பெருக்கெடுக்க தன்னால் இயன்றவரை நிறுத்த முயன்றார். மிக அருகே வந்து விட்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுனரின் வெளுத்த முகம் கூட தெளிவாய் தெரிய... ரயிலும் தன்னால் இயன்ற வரையில் முனகி நிற்க முயன்று முடியாமல்...

நானும் அடுத்து என்ன ஆச்சோ என்று நகமிழந்து உட்கார்ந்திருக்கிறேன்.

ஆனால் என்ன செய்வது? இந்த தாடிக்கார பெரியவர் அடுத்த பக்கம் திருப்பாமல் நித்திரையில் ஆழ்ந்துட்டாரே!

- My shortstory published in Youthful Vikatan

Related Posts:

1. Washing Machine

2. Male Gynaecologist

3. Body of Evidence

என்ன கொடுமை சார் இது? பாகம் 8

Posted by RV on July 13, 2009 , under , | comments (2)




நம்ம ஊரைப் பொறுத்தவரை மகப்பேறு மருத்துவர் என்றாலே, வெள்ளைக் கோட் அணிந்த, கண்ணாடி போட்ட குண்டு டாக்டர் ஆண்ட்டி தான். ஆனால், மேலை நாடுகளிலெல்லாம் ஆண் மகப்பேறு மருத்துவர் பலர் உண்டு. "ஆண் மகப்பேறு மருத்துவர், சொந்த கார் இல்லாத மெக்கானிக்" என்று ஆண் மகப்பேறு மருத்துவரைப் பற்றி ஒரு அமெரிக்க காமெடியன் கூறினார்.

எனக்குத் தெரிந்து ஒரு வயதான ஆண் மகப்பேறு மருத்துவர் ஆந்திராவில் இருக்கிறார். அவர் எய்ட்ஸ் கிருமி பற்றிய ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டவர். பொதுவாக HIV கிருமி உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இயற்கையான முறையில் இல்லாமல் சிசேரியன் முறையில் குழந்தையை எடுத்து விடுவார்கள். இவ்வாறான சிசேரியன் செய்வதில் நம்ம ஆள் கில்லாடி.

இப்படி ஒரு ஹெச்.ஐ.வி. கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கும் போது, திடீரென பனிக்குட நீர் உடைந்து சிதறி அவரை முழுவதும் நனைத்திருக்கிறது. என்ன தான் பச்சை அங்கி அணிந்திருந்தாலும், அந்த நீர் அப்படியே ஊடுருவி, அவருடைய உள்ளாடை வரை நனைத்து, "சொல்லாத இடம் கூட குளிர்கின்றது" என்ற அளவிற்கு நனைத்து, ஏசி குளிரிலும் அவருக்கு வேர்த்திருக்கிறது. உடனே ஆபரேஷனை அவசர கதியில் முடித்து, ஆறு பக்கட் தண்ணீரில் குளித்திருக்கிறார் நம்ம டாக்டர்.
அன்றிரவு துக்கம் தொண்டையை அடைத்து, தூக்கம் நொண்டி அடிக்க, நம்ம மகப்பேறு டாக்டர் தன்னுடைய பேராசிரியருக்கு அர்த்த ராத்திரியில போன் போட்டு கதறியிருக்கிறார். அந்த வயதான பேராசிரியரும் நடுநிசியிலும் வைராலஜி கிளாஸ் எடுத்திருக்கிறார். அவருடைய அறிவுரைப் படி பல புத்தகங்களையும், இணைய தளங்களிலும் உலவி படித்திருக்கிறார். அது போக முன்னெச்சரிக்கையாக மருந்துகள் வேறு ஆயிரக்கணக்கில் செலவு செய்து சாப்பிட்டிருக்கிறார்.
திடீரென மரண பயம் தன்னை ஆட்கொள்ளும் போதெல்லாம், நேர காலம் பார்க்காமல் பேராசிரியரை போன் போட்டு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

பின்னர் பேராசிரியர் அறிவுரையின் படி ஹெச்.ஐ.வி ஜன்னல் கால (Window Period) முடிவில், தன் ரத்தத்தை சோதித்துப் பார்த்திருக்கிறார். அந்தச் சோதனையில் ஹெச்.ஐ.வி கிருமி இல்லை என்று தெரிந்தும் அவருக்கு மனம் சமாதானமாகவில்லை. திரும்பவும் அன்றிரவு பேராசிரியருக்கு போன் போட்டு கதறியிருக்கிறார். தான் அடுத்த நாள் ஒரு ஹெச்.ஐ.வி. பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப் போவதாகக் கூறி, தனக்கு பயமாக இருப்பதாகவும் நாலு வார்த்தை ஆறுதல் கூறுங்கள் என்றிருக்கிறார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வயதான பேராசிரியர் சற்றும் யோசிக்காமல் கூறினார் " டாக்டர் தம்பி, இனிமேல் சிசேரியன் செய்வதாக இருந்தால், மறக்காமல் காண்டம் போட்டுக்க".
Related Posts:

காதல் பரிசு

Posted by RV on July 07, 2009 , under | comments (1)



எதிரே நின்று வெறித்து பார்த்தவனை பார்க்க பார்க்க வேதனையாக இருந்தது. எப்படி இருந்த கலையான முகம், குழி விழும் கன்னங்கள் , கட்டுடல் எல்லாம் உருக்குலைந்து, எலும்புக்கூட்டிற்கு டைட்டான தோல் சட்டை அணிவித்தது போல இருந்தது. இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற மூன்றெழுத்து தானே என நினைத்த பொது வயிற்றில் மேலும் Hydrochloric acid சுரந்தது. முதலில் என் உயிரின் பாதியான நண்பனை அறிமுகப்படுத்தி விடுகிறேன்.

ஒரே ஊரில் "Birth certificate " பெற்று, ஒரே ஸ்கூல், காலேஜில் "Transfer certificate " பெற்று, ஒரே ஆபீஸில் வேலை செய்யும் இணைபிரியாத நண்பர்கள் நானும் ரபியும். ரபி மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் கண்டிப்பாக கல்யாணம் செய்து கொண்டிருப்பேன். எங்களுக்கிடையில் அவ்வளவு மனப்பொருத்தம். இசையும் இளையராஜாவும் போல் இணைபிரியாமல் வாழ்ந்து வந்தோம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில், என் செல்பேசியை சிணுங்க வைத்து, அவசரமாக அண்ணா நகர் ஆர்ச் அருகே வா என பதற்றக் குரலில் ரபி பேச, உடனே விரைந்தேன். அங்கே சாலையோரமாய் ரபியின் Yamaha ஒரு Scooty யை முத்தமிட்ட நிலையில் ஒய்யாரமாய் சாய்ந்து கிடக்க, பக்கத்து திறந்த வெளி உணவகத்தில் இருந்து ரபி கைதட்டி அழைத்தான். அவனுடம் புஜம் வரை நீள கையுறை அணிந்த ஒரு ஜீன்ஸ் யுவதி. அவளை ஸ்வேதா என அறிமுகப்படுத்தி வைக்க , நானும் அவளும் 'ஹாய்' சொல்லி ஒரு ரெடிமேட் புன்னகை பரிமாறிக் கொண்டோம். "சாரிடா மச்சான், ஆக்சிடெண்ட் ஆனா பதட்டத்தில் உன்னை வர சொல்லிட்டேன். எங்க ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. முதல்ல சண்டை போட்டோம், அப்புறமாய் சமாதானமாகி, பிரண்ட்ஸ் ஆயிட்டோம்" என்று வழிந்தான்.

எல்லாம் இந்த கிரகாம் பெல்லை சொல்லணும். செல்பேசி ஊடகத்தில் தொடர்ந்த ரபி-ஸ்வேதா நட்பு, ஒரு சுபயோக தினத்தில் காதல் அவதாரம் எடுத்தது.

நியூஸ் பேப்பரில் கூட ஹிந்து மட்டுமே படிக்கும் மதவெறி பிடித்த ஸ்வேதாவின் அப்பாவிற்கு இந்த விஷயம் தெரிந்தவுடன் ஒரே ருத்ர தாண்டவம் தான். அவளை House arrest இல் வைக்க, ரபி instant தேவதாசாக மாறினான்.
நண்பனின் நிலையைப் பார்க்க சகிக்காமல், register கல்யாணம் செய்யுமாறு ஐடியா கொடுத்து, உயிரைப் பணயம் வைத்து ஸ்வேதாவை கடத்தியும் வந்தேன்.

Register ஆபீஸில் அலுவலக நண்பர்கள் புடைசூழ ரபி-ஸ்வேதா திருமணம் பதிவானது. திடீரென உள்ளே புயலெனப் புகுந்த ஸ்வேதாவின் படைப்பாளி, கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டே , அழைத்து வந்திருந்த சண்டியர்களை ஏவினார். ரத்தம் கொதித்தது எனக்கு. இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த ஆயுதங்கள் கொண்டு அவர்கள் ரபியைத் தாக்க ஆரம்பிக்க, நண்பர்கள் உதவியுடன் நாங்களும் தாக்க ஒரே ரத்தக்களறி. எப்படியோ போராடி ரபி-ஸ்வேதாவை வெளியே அழைத்து வந்து ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி டாட்டா காட்டிய போது, ஒரு ரத்தம் தோய்ந்த அரிவாள் என் முதுகில் சொருகி ரத்த ருசி கண்டது. எப்படியோ புதுமணத் தம்பதிகள் ஆபத்திலிருந்து தப்பியதை நினைத்துப் பெருமூச்சு விட்ட போது கண்கள் இருட்டியது.

இரண்டு மாத ஆஸ்பத்திரி வாசத்திற்குப் பின் ஓரளவு தேறி வந்த பின்னும், உடல் நிலை அடிக்கடி மோசமானது. ஆறேழு மாதமாய் அந்த ஆஸ்பத்திரியின் நிரந்தர உறுப்பினர் கார்டு வாங்காதது தான் பாக்கி. அடிக்கடி சுவாசக் கோளாறு வந்து, உடல் இளைத்து அட்மிட் ஆகியிருந்த என்னைப் பார்க்க வந்த ரபியின் முகத்தில் வழக்கமான ஒளியே இல்லை. முதல் திருமண நாள் முடிந்த சூட்டோடு அவளை விவாகாத்து செய்யப் போவதாக , ஏதோ சவரம் செய்யப் போவதைப் போல சாதாரணமாக சொன்னான்.

Positive Attitude கொண்ட நான், ரத்தம் தோய்ந்த அரிவாள் வெட்டினாலோ, ஏற்றிய ரத்ததினாலோ, HIV Positive என்று கண்டறியப்பட்டு , நோய்களின் கூடாரமாய்...

எதிரே நின்று வெறித்துப் பார்ப்பவனைப் பார்க்க பார்க்க வேதனையாய் இருந்தது.
கண்ணாடியை உடைத்து விடலாம் போல இருக்கிறது.

Body of Evidence

Posted by RV on July 03, 2009 , under | comments (0)



Killing a human in India is as easy as swatting a mosquito, mused Dr.Thomas with a cynical smile. It was 2.30 AM and he was sitting in the balcony of his scenic beachside bungalow in Chennai, amidst the cloud of cigarette smoke, listening to the rhythm of waves .His eyes

were bloodshot, thanks to the brandy and waking up all night. He has saved millions of human lives for his living and was about to take away a life for his prestigious living. Being a doctor himself, he was well aware of the autopsy procedures in Government hospitals wherein the drunken orderlies perform literally butchery.

He was running a typical upper class doctor's peaceful life until, Michael stormed into his room with his only daughter Angel hand in hand and informed that they are going to get married soon. It was more of giving information than getting his permission.

If Dr. Thomas was taken aback he didn't show it. With an Oscar winning performance he congratulated them and gave away his consent, though it was not sought. Right from that moment, his neurons were working overtime in hatching a foul proof plan to finish

off Michael. Of course, Angel will be broken for some days. But time is the best healer known so far. So he can fulfill his dream of merging his hospital with the city's top most hospital by getting Angel married to the chairman’s only son, a famous neurosurgeon.

A murder should be properly planned and executed in such a way that no trail is left behind and mimicking natural death. He was confident over his modus operandi, which, he'd replayed several times in his mind taking into account all the odds. He had recently come across an article in a medical journal that highlighted the difficulties in detecting the reason for death in cases of Ethylene glycol poisoning.

Ethylene glycol, being a colourless, odourless and sweet liquid which can be mixed with water or any alcoholic beverages and if a fatal dose is administered, the symptoms show only after two days and lead to severe complications like cardiac failure, respiratory problems and kidney failure ultimately death. So Dr.Thomas considered Ethylene glycol as the elixir of his life.

So his plan was to invite Michael for a Christmas dinner and poison his drinks with ethylene glycol which will eventually take him to the Christ.

Accepting the invitation, Michael was sharp on time for dinner in a Tuxedo, looking strikingly handsome as ever.Only when Dr.Thomas and Angel received Michael and escorted him in, he realized that he was the only guest for the dinner.

Knowing very well the crooked and materialistic mind of Dr., something stroke a chord in him. The dinner was very grand and appetizing. During desserts session, the course of conversation turned towards Michael’s career interests. Dr.Thomas was stricken on the face when Michael continued describing about his research topic on toxicology and his recent innovative invention of a pen sized tool that sterilizes drinking water and other drinks and at the same time detects any possible hazardous substances in them. Before Thomas could react or say anything, Michael proudly pulled out a black shiny pen like object with a Laser light at the tip and inserted in the drink served for him.

Immediately a beeper went off and the display panel flashed “High concentration of Ethylene Glycol”. Michael didn’t require more than a millisecond to put all the pieces together. Having caught red handed, Dr.Thomas couldn’t come out with any convincing explanation. Michael’s glare was boring right through his eyes and his apple of eye Angel looking at him as if he is a wriggling worm, made him lose his reasoning and temper.

Suddenly he pounced on Michael and clasped his neck and started strangling him. With great difficulty, in a surge of fear for death and in an action of defense, Michael released himself and pushed Dr. aside. As Michael coughed out easing his airway and catching his

breath, Angel let out a high pitched scream. Dr.Thomas had fallen down with his head first on a lawn mover, causing an internal hemorrhage and his soul had taken a detour to meet St.Peters for his destination, hell.

Michael and Angel were suddenly soaked in their own sweat and both were standing speechless, staring at Doctor’s corpse. Though it was not intentional, Michael knew very well that he will be branded as a murderer who killed the wealthy doctor for his daughter and heirdom. Since Michael’s brother was a famous lawyer in town, he thought it will be a better idea to discuss this issue with him and do as instructed by him. So he took Angel with him to his house and was frustrated to see that his brother had left a post-it note on the door saying that he is going to Delhi on an emergency. Both of them spent the night

sleepless with frightening thoughts haunting them.

As dawn broke, both Michael and Angel thought of informing the police and surrendering. So they started to walk and on the way, the headlines of that day’s newspaper read “Tsunami waves hit coastal regions of Chennai taking a toll of

thousands of lives”. The second page featured the demolished beach bungalow and the recovered body of the famous Cardiac surgeon Dr. Thomas.

Related Posts:

  1. Woman on top
  2. Music is Life – Short story
  3. Cold blooded Murder – Shortest story
  4. Count down – Shortest story

எல்லாம் நேரம்

Posted by RV on June 30, 2009 , under | comments (5)



ர்போர்ட்டை விட்டு வெளியே வந்தவனுக்கு சுமார் முப்பது வயது இருக்கலாம். கறிக்கடைக்காரன் வளர்த்த நாய் மாதிரி நல்லா 'கொழு கொழு' வென்ற தேகம், கண்ணில் ரேபான், பையில ஐ போன், காதுல ஐ பாட், கையில லேப் டாப் என எல்லா விதத்திலும் பணம் பகட்டாய் பல்லிளித்தது. டாக்சியில் ஏறி நேராய் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில், பொய்ப் பெயரில் பதிந்து வைத்திருந்த அறைக்குள் நுழைந்து அறையை நோட்டம் விட்டான். சந்தேகப்படும் விதமாக எதுவும் தட்டுப்படாதால், பைக்குலிருந்து ஒரு பழைய நோக்கியா கைபேசியை எடுத்து, அவனுக்குக் கொடுக்கபட்டிருந்த சிம் கார்டை சொருகி, அந்த ரகசிய எண்ணை ஒற்றினான்.

மறுமுனையில் பேசிய அந்த அதிகாரமிக்க கர கர குரல் சற்றே பதற்றத்துடன் ஒலித்தது. தமிழகத்தின் மிக வலிமையான ஒரு அரசியல்வாதி தன்னை நம்பி சிங்கப்பூரில் இருந்து வரவழைத்தது அவனுக்குப் பெருமையாக இருந்தது. ஆர்.டி.எக்ஸ். என்ற சந்தேக பாஷையில் அழைக்கப்பட்ட அவனது வெடிகுண்டு ஞானம் உலக அளவில் அவ்வளவு பிரசித்தி.

அமைச்சர் நேராக விஷயத்திற்கு வந்தார். இன்னைக்கு மதியம் கட்சி அலுவலகத்துல நடக்கப்போற உயர்மட்டக் குழு சந்திப்புக்குப் போறேன். அந்த அரை மணி நேர மீட்டிங் முடிஞ்சு நாலு மணிக்கு அங்கிருந்து கிளம்பிடுவேன். அதற்கப்புறம் அங்க எதிரணிக் கூட்டமும், வேலை வெட்டியில்லாத தொண்டர் கூட்டமும் தான் கட்சிப் பணி ஆற்றிட்டு இருப்பாங்க. சரியா ஆறு மணிக்கு அங்க குண்டு வெடித்து அந்த கட்டிடமே தரை மட்டமாக வேண்டும்.

கட்சிக்குள்ளேயே எனக்கு எதிரான கூட்டத்தையும் அழிச்சிடலாம், என்னைக் குறிவச்சு எதிர்க்கட்சி பண்ணிய சதின்னு சொல்லி அனுதாப அலையையும் உருவாக்கிடலாம். தேர்தல் வேற வேகமா நெருங்கிட்டிருக்கு, இப்படி ஏதாவது பண்ணியாகணும் ஆர். டி. எக்ஸ். என்றார்.

தன் சுவிஸ் வங்கிக் கணக்கில் அமைச்சர் சொன்னபடி வந்து விழுந்த ஏழு இலக்க எண்கள் அளித்த உத்வேகத்தோடு கட்சிக்கரை வேட்டியோடு அலுவலகம் சென்று, சரியான இடங்களைத் தேர்ந்தெடுத்து டைமர் செட் செய்த ஆர்.டி.எக்ஸ். வைத்து விசிலடித்தபடி வெளியே வந்தான்.

ஸ்காட்ச் கதகதப்பில் சற்றே கண்ணசந்தவன் கண் விழித்த போது மணி ஐந்தரை. ரிட்டர்ன் விமானத்துக்கு நேரமானதை உணர்ந்து அவசர அவசரமாய் ரூமை காலி செய்து ஏர்போர்ட் விரைந்தான். செக்-இன் செய்ய அடித்துப் பிடித்துப் போய் நின்ற போது அந்த எப்போதும் புன்னைகைக்கும் அழகுப் பதுமை, "சார் உங்கள் ஏழு மணி சிங்கப்பூர் விமானத்துக்கு நீங்கள் மிகவும் சீக்கிரமே வந்து விட்டீர்கள். இப்போது தான் மணி நாலு ஆகிறது," என்றாள்.

காலையில் சென்னையில் இறங்கியவுடன் கடிகாரத்தில் சிங்கப்பூர் நேரத்தை மாற்றாதது சுரீரென உரைக்க, காலுக்குக் கீழ் பூமி நழுவுவது போலிருந்தது ஆர்.டி.எக்சுக்கு.

விமான நிலைய எல்.சி.டி. டீவியில் பிளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது!


அங்கிருந்து இங்கு

Posted by RV on June 29, 2009 , under | comments (0)



பிறப்புச் சான்றிதழ், பிறந்த சாதிச் சான்றிதழ் இங்கிருந்து

கல்விச் சான்றிதழ், கையோடு பாஸ்போர்ட் இங்கிருந்து
கை நிறைய சம்பளம் பத்தாதென கிளம்பினேன் இங்கிருந்து
தள்ளாத வயதில் தாய் தந்தை தனியாய் தவிக்க இங்கிருந்து

உண்ட வீட்டில் சாணி போட்டு, அண்டை வீட்டுக்கு பால் கொடுக்கும் பசுவாய்
பை நிறைய சம்பாதித்து முக்கால் பையை வரியாய் செலுத்தி
பத்து ஏக்கர் நிலம், பண்ணை வீடு ஊரில் அனுபவிக்காமல்
பத்துக்கு பத்து அப்பார்ட்மென்டில் முடங்கி...

கிடைத்த லீவில், கிடைத்தவளுக்கு அவசர தாலி கட்டி
மொழி தொலைத்து, கலாசாரம் தொலைத்துக் குழம்பிய குழந்தை பெற்று
தாத்தா பாட்டியை web cam ஒளிபரப்பில் அறிமுகம் செய்து
பருவ வயதில் அவள் பாய் ஃபிரெண்ட் கருப்பனோடு டேட்டிங் செல்ல
என்னிடமே செகண்ட் ஹேண்ட் கார் சாவி கேட்க பதறி...

மலிவு விலை சாக்லேட், சென்ட் பாட்டில் நிரப்பி
விசா புதுப்பிக்க சம்பிரதாயமாய் தாய் நாடு பயணம்!
அங்கெல்லாம் இது போல் இல்லை என நித்தம் ஒப்பிட்டு
வார்த்தைக்கு வார்த்தை நான்கெழுத்தில் திட்டி, தோள் குலுக்கி

பருப்பு பொடி, ஊறுகாய், சற்றே கனத்த மனதோடு விமானம் ஏறி,
iPod பொருத்தி கண் மூடினால்
"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?"
என சவால் விடும் இளையராஜா!


Youthful விகடனில் வெளியான எனது கவிதை

நாலு கால் நண்பன்

Posted by RV on June 23, 2009 , under | comments (0)



"அதான் உன்னை வளர்க்கிறோமே , நாய வேற தனியா வளர்க்கனுமா ?" சின்ன வயசில நாய் வளர்க்கணும்ன்னு ஆசைப்பட்டு வீட்டுல கேட்டப்ப வந்த பதில் தான் அது.
இப்ப இருக்கிற தேன் கூடு அடுக்கு மாடிக் குடியிருப்புல எங்க போய் நாய வளர்க்கிறது ? இருந்தாலும் எங்க தெருவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நாய் (நாட்டு நாய் தான்) மேல எனக்கு ஒரு ஸ்பெஷல் பாசம். செகண்ட் ஷோ முடிஞ்சு லேட் நைட்டில வீடு வந்தப்போ கோபத்தோட கணுக்கால் கடிக்க வந்து, நானும் கல்லெறிஞ்சு சண்டையில ஆரம்பிச்சு , அப்புறம் அதுக்கு பிஸ்கெட் போட்டு, மஸ்கா போட்டு சிநேகமாயிட்டோம். அது ஒரு விதமான Commitment-free pet rearing மாதிரி.

தினமும் களைச்சுப் போய் வீடு திரும்பும் போது, எங்கேயோ நீல்மெட்டல் குப்பையக் கிளறிட்டு இருந்தாலும், பைக் சத்தம் கேட்டதும் அதை அப்படியே விட்டுட்டு ஓடி வந்து, பொண்டாட்டிக்கு முன்னாடி வரவேற்கும் ஜீவன் அது.
இப்போ ஒரு நாலஞ்சு நாளா , அந்த நாலு கால் நண்பன் கண்ல படவே இல்லை. தண்ணீ லாரியா, சென்னை மாநகராட்சியா , முதுமையா என்ன காரணம் தெரிய வில்லை. வாங்கி வைத்த பிஸ்க்கட்டுகளை எறும்புகள் மொய்க்க, மனது வலிக்கிறது.

அந்த நாலு கால் நண்பனின் நினைவாக ஒரு பதிவு எழுத வேண்டும் என்று யோசித்த போது தான் தோன்றியது, தமிழில் தான் நாய்களைப் பற்றி எவ்வளவு பழமொழிகள்? ஆதி காலத்திலிருந்தே மனிதனின் மனதில் , வேறு எந்த ஒரு வீட்டு மிருகத்துக்கும் இல்லாத ஒரு இடத்தை நாய்கள் பிடித்திருக்கின்றன என்பதற்கு இவையே சாட்சி.
  1. நாய்க்குப் பேரு முத்து மாலையாம்
  2. நாய்க்கு நெய் செரிக்காது
  3. நாய்க்கு வேலையில்லை, ஆனால் நிக்க நேரமில்லை
  4. நாய் கிட்ட போய் #### கடன் கேட்ட மாதிரி
  5. நாயக் குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும் ...
  6. ஓலைப் பாயில நாய் ஒண்ணுக்கடிச்ச மாதிரி "சொள சொள"ன்னு...
  7. ஆறு நிறைய தண்ணீர் ஓடினாலும் நாய் நக்கி நக்கி தான் குடிக்கும்
  8. வேலையில்லாதவன் நாயக் கூப்பிட்டு வச்சு சிரச்சானாம்
  9. கல்லைக் கண்டா நாயக் காணோம் ; நாயக் கண்டா கல்லைக் காணோம்
  10. நாய் கையில கிடைச்ச தேங்காய் மாதிரி - தானும் திங்காது , அடுத்தவனையும் திங்க விடாது
  11. வைக்கப்பொடப்ப நாய் காவல் காத்த மாதிரி
  12. நாய் வால நிமிர்த்த முடியாது
  13. நாய வேலை ஏவுனா, அது தன வாலை ஏவுமாம்
  14. நாயக் கொஞ்சினா வாய நக்கும்
  15. நாய்க்கு வாக்கப்பட்டா குரைச்சு தான் ஆகணும்
  16. நாய் சகவாசம் சேலையக் கிழிக்கும்
  17. குரைக்கிற நாய் கடிக்காது
  18. நாய் நக்கி சமுத்திரம் வத்திப் போயிடுமா ?
  19. நாய் விற்ற காசு குறைக்காது
  20. நாய் குரைச்சு விடியுமா? கோழி கூவி விடியுமா ?
  21. நாய் இருக்கும் இடத்தில் சண்டை இருக்கும்
  22. நாய் கேட்ட கேட்டுக்கு மாமரத்து நிழலாம்
  23. சூரியனப் பார்த்து நாய் குரைக்கிற மாதிரி
உங்களுக்குத் தெரிந்த , இதில் விட்டுப் போன பழமொழிகளை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.