Jul 28, 2009

ராஜ வம்சம் : குட்டிக் கதை


காடு மலைகள் சூழ்ந்த பின்னணியில், அவர்கள் அனைவரும் வரிசையாக கூடியிருந்தனர்.
நான்கு நாட்டின் மக்களும், ராஜ வம்சமும், அமைச்சர்களும் கூடியிருந்ததால் பரபரப்புக்கும் சலசலப்புக்கும் அந்த இடத்தில் பஞ்சமில்லாமல் இருந்தது.
காலம் காலமாய் தொடர்ந்து வரும் நிறப் பாகுபாட்டால் கறுப்பு இனமும், சிவப்பு இனமும் பிளவுபட்டு எதிரெதிர் அணியில் நின்றிருந்தனர்.
கூட்டத்தின் இடையே அவ்வப்போது தன் சேஷ்டைகளாலும் அகடவிகடத்தாலும் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர் கோமாளிகள்.
சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல ராஜா ராணியின் வைரங்கள் ஜொலித்து எதிரணி ராணியின் வயிற்றெரிச்சலுக்கு உரம் போட்டன.
கறுப்பாக இருந்தாலும் களையாக இருந்த ராணிகளைக் கண்டு சிவப்பின ராஜாவின் இதயத்தின் லப்-டப் எகிறிக் கொண்டிருந்தது.
சுற்றிலும் ஆட்கள் சேர்ந்து, நடுவில் காசு பணம் குவியத் தொடங்க, சூடுபிடிக்கத் தொடங்கியது. வரிசை வாரியாக முதலில் சேர்ந்த சிவப்பு வைரம் அணி வெற்றி வாகை சூடி, ரம்மி ராகவனை இன்ஸ்டண்ட் பணக்காரனாக்கியது!


Jul 27, 2009

வைகை எக்ஸ்பிரஸ் : சிறுகதை


ந்தூரி அடுப்பில் தகிக்கும் சிகப்பு சிக்கனாக கத்திரி போடும் சித்திரை வெயிலில் வைகை எக்ஸ்பிரஸில் மதுரை நோக்கிப் பயணமானேன். நெற்றியில் இரும்புத்துரு வாசனை நீர் நனைத்த கைக்குட்டை மூன்று முறை நனைந்து காய்ந்திருந்தது. வெளியில் தான் இவ்வளவு வெக்கை என கம்ப்பார்ட்மெண்டில் ஏதாவது பசுமை தேறுமா என்று பார்வையை சுழற்றினால், ஏதோ முதியோர் இல்லத்திலிருந்து கல்விச்சுற்றுலா??!!! அழைத்து வந்தது போல எல்லாம் சீனியர் சிட்டிசன் சலுகையோடு ரயிலேறியவர்கள்!
சும்மாவா பாடினார் இளையராஜா, "ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே" என்று?
ஆலயமணி சரோஜா தேவி தொடங்கி மா..ஆ..ஆ.. ஆ.. சி.. ல்.. லா.. மணி சுனைனா வரை சூடு பறக்கும் அரட்டையில் இருந்தனர் பெரிசுகள்.
நடுநடுவே "அந்த காலத்தில எல்லாம்..." என்ற ஃப்ளாஷ் பேக் வேறு. என் அருகில் இருந்த தாடிக்கார பெரியவர் மட்டும் கருமமே கண்ணாய் தன் தடித்த கண்ணாடி தாண்டி ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.
*
ன்ன தான் மத்திய அரசு உத்தியோகஸ்தனாக இருந்து என்ன பயன்? மத்திய அரசு கொடுத்த சம்பளப் பணத்தை மாநில அரசின் டாஸ்மாக்கில் தாரை வார்த்து வார்த்து, முருகனுக்கு கழுத்து வரை கடன் தொல்லை. கவலை மறக்க கடை திறந்ததும் டாஸ்மாக்கில் சரணடைந்து விஜய் மல்லையாவின் கருணையால்??!! தன் கடன் சுமையை, இந்த உலகத்தையும் தன் பகல் நேர ரயில்வே ட்யூட்டியையும் மறந்தான்.
இருக்கும் ஒரு வழி இருப்புப்பாதையில் எதிரெதிர் வரும் ரயில்களில் ஒன்றை நிறுத்தி, மற்றொன்று கடந்த பின் சிக்னல் கொடுக்கும் கடமை முருகனுக்கு.
சரக்கு ரயிலின் ஓட்டுனருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் கூவல் ஒலி சமீபத்தில் கேட்ட போது தான் ஏதோ தவறு நடந்திருப்பதாக தோன்றியது. தன் வாக்கி-டாக்கியை தேடி எடுத்து பேச விழைவதற்குள், எதிர் வளைவில் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வருவது தெரிந்தது. ரத்தத்தில் அட்ரினாலின் வெள்ளப்பெருக்கெடுக்க தன்னால் இயன்றவரை நிறுத்த முயன்றார். மிக அருகே வந்து விட்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுனரின் வெளுத்த முகம் கூட தெளிவாய் தெரிய... ரயிலும் தன்னால் இயன்ற வரையில் முனகி நிற்க முயன்று முடியாமல்...
நானும் அடுத்து என்ன ஆச்சோ என்று நகமிழந்து உட்கார்ந்திருக்கிறேன்.
ஆனால் என்ன செய்வது? இந்த தாடிக்கார பெரியவர் அடுத்த பக்கம் திருப்பாமல் நித்திரையில் ஆழ்ந்துட்டாரே!
Related Posts:

Jul 13, 2009

என்ன கொடுமை சார் இது? பாகம் 8


நம்ம ஊரைப் பொறுத்தவரை மகப்பேறு மருத்துவர் என்றாலே, வெள்ளைக் கோட் அணிந்த, கண்ணாடி போட்ட குண்டு டாக்டர் ஆண்ட்டி தான். ஆனால், மேலை நாடுகளிலெல்லாம் ஆண் மகப்பேறு மருத்துவர் பலர் உண்டு. "ஆண் மகப்பேறு மருத்துவர், சொந்த கார் இல்லாத மெக்கானிக்" என்று ஆண் மகப்பேறு மருத்துவரைப் பற்றி ஒரு அமெரிக்க காமெடியன் கூறினார்.


எனக்குத் தெரிந்து ஒரு வயதான ஆண் மகப்பேறு மருத்துவர் ஆந்திராவில் இருக்கிறார். அவர் எய்ட்ஸ் கிருமி பற்றிய ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டவர். பொதுவாக HIV கிருமி உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இயற்கையான முறையில் இல்லாமல் சிசேரியன் முறையில் குழந்தையை எடுத்து விடுவார்கள். இவ்வாறான சிசேரியன் செய்வதில் நம்ம ஆள் கில்லாடி.


இப்படி ஒரு ஹெச்.ஐ.வி. கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கும் போது, திடீரென பனிக்குட நீர் உடைந்து சிதறி அவரை முழுவதும் நனைத்திருக்கிறது. என்ன தான் பச்சை அங்கி அணிந்திருந்தாலும், அந்த நீர் அப்படியே ஊடுருவி, அவருடைய உள்ளாடை வரை நனைத்து, "சொல்லாத இடம் கூட குளிர்கின்றது" என்ற அளவிற்கு நனைத்து, ஏசி குளிரிலும் அவருக்கு வேர்த்திருக்கிறது. உடனே ஆபரேஷனை அவசர கதியில் முடித்து, ஆறு பக்கட் தண்ணீரில் குளித்திருக்கிறார் நம்ம டாக்டர்.
அன்றிரவு துக்கம் தொண்டையை அடைத்து, தூக்கம் நொண்டி அடிக்க, நம்ம மகப்பேறு டாக்டர் தன்னுடைய பேராசிரியருக்கு அர்த்த ராத்திரியில போன் போட்டு கதறியிருக்கிறார். அந்த வயதான பேராசிரியரும் நடுநிசியிலும் வைராலஜி கிளாஸ் எடுத்திருக்கிறார். அவருடைய அறிவுரைப் படி பல புத்தகங்களையும், இணைய தளங்களிலும் உலவி படித்திருக்கிறார். அது போக முன்னெச்சரிக்கையாக மருந்துகள் வேறு ஆயிரக்கணக்கில் செலவு செய்து சாப்பிட்டிருக்கிறார்.
திடீரென மரண பயம் தன்னை ஆட்கொள்ளும் போதெல்லாம், நேர காலம் பார்க்காமல் பேராசிரியரை போன் போட்டு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார்.


பின்னர் பேராசிரியர் அறிவுரையின் படி ஹெச்.ஐ.வி ஜன்னல் கால (Window Period) முடிவில், தன் ரத்தத்தை சோதித்துப் பார்த்திருக்கிறார். அந்தச் சோதனையில் ஹெச்.ஐ.வி கிருமி இல்லை என்று தெரிந்தும் அவருக்கு மனம் சமாதானமாகவில்லை. திரும்பவும் அன்றிரவு பேராசிரியருக்கு போன் போட்டு கதறியிருக்கிறார். தான் அடுத்த நாள் ஒரு ஹெச்.ஐ.வி. பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப் போவதாகக் கூறி, தனக்கு பயமாக இருப்பதாகவும் நாலு வார்த்தை ஆறுதல் கூறுங்கள் என்றிருக்கிறார்.


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வயதான பேராசிரியர் சற்றும் யோசிக்காமல் கூறினார் " டாக்டர் தம்பி, இனிமேல் சிசேரியன் செய்வதாக இருந்தால், மறக்காமல் காண்டம் போட்டுக்க".
Related Posts:

Jul 7, 2009

காதல் பரிசு


எதிரே நின்று வெறித்து பார்த்தவனை பார்க்க பார்க்க வேதனையாக இருந்தது. எப்படி இருந்த கலையான முகம், குழி விழும் கன்னங்கள் , கட்டுடல் எல்லாம் உருக்குலைந்து, எலும்புக்கூட்டிற்கு டைட்டான தோல் சட்டை அணிவித்தது போல இருந்தது. இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற மூன்றெழுத்து தானே என நினைத்த பொது வயிற்றில் மேலும் Hydrochloric acid சுரந்தது. முதலில் என் உயிரின் பாதியான நண்பனை அறிமுகப்படுத்தி விடுகிறேன்.

ஒரே ஊரில் "Birth certificate " பெற்று, ஒரே ஸ்கூல், காலேஜில் "Transfer certificate " பெற்று, ஒரே ஆபீஸில் வேலை செய்யும் இணைபிரியாத நண்பர்கள் நானும் ரபியும். ரபி மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் கண்டிப்பாக கல்யாணம் செய்து கொண்டிருப்பேன். எங்களுக்கிடையில் அவ்வளவு மனப்பொருத்தம். இசையும் இளையராஜாவும் போல் இணைபிரியாமல் வாழ்ந்து வந்தோம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில், என் செல்பேசியை சிணுங்க வைத்து, அவசரமாக அண்ணா நகர் ஆர்ச் அருகே வா என பதற்றக் குரலில் ரபி பேச, உடனே விரைந்தேன். அங்கே சாலையோரமாய் ரபியின் Yamaha ஒரு Scooty யை முத்தமிட்ட நிலையில் ஒய்யாரமாய் சாய்ந்து கிடக்க, பக்கத்து திறந்த வெளி உணவகத்தில் இருந்து ரபி கைதட்டி அழைத்தான். அவனுடம் புஜம் வரை நீள கையுறை அணிந்த ஒரு ஜீன்ஸ் யுவதி. அவளை ஸ்வேதா என அறிமுகப்படுத்தி வைக்க , நானும் அவளும் 'ஹாய்' சொல்லி ஒரு ரெடிமேட் புன்னகை பரிமாறிக் கொண்டோம். "சாரிடா மச்சான், ஆக்சிடெண்ட் ஆனா பதட்டத்தில் உன்னை வர சொல்லிட்டேன். எங்க ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. முதல்ல சண்டை போட்டோம், அப்புறமாய் சமாதானமாகி, பிரண்ட்ஸ் ஆயிட்டோம்" என்று வழிந்தான்.

எல்லாம் இந்த கிரகாம் பெல்லை சொல்லணும். செல்பேசி ஊடகத்தில் தொடர்ந்த ரபி-ஸ்வேதா நட்பு, ஒரு சுபயோக தினத்தில் காதல் அவதாரம் எடுத்தது.

நியூஸ் பேப்பரில் கூட ஹிந்து மட்டுமே படிக்கும் மதவெறி பிடித்த ஸ்வேதாவின் அப்பாவிற்கு இந்த விஷயம் தெரிந்தவுடன் ஒரே ருத்ர தாண்டவம் தான். அவளை House arrest இல் வைக்க, ரபி instant தேவதாசாக மாறினான்.
நண்பனின் நிலையைப் பார்க்க சகிக்காமல், register கல்யாணம் செய்யுமாறு ஐடியா கொடுத்து, உயிரைப் பணயம் வைத்து ஸ்வேதாவை கடத்தியும் வந்தேன்.

Register ஆபீஸில் அலுவலக நண்பர்கள் புடைசூழ ரபி-ஸ்வேதா திருமணம் பதிவானது. திடீரென உள்ளே புயலெனப் புகுந்த ஸ்வேதாவின் படைப்பாளி, கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டே , அழைத்து வந்திருந்த சண்டியர்களை ஏவினார். ரத்தம் கொதித்தது எனக்கு. இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த ஆயுதங்கள் கொண்டு அவர்கள் ரபியைத் தாக்க ஆரம்பிக்க, நண்பர்கள் உதவியுடன் நாங்களும் தாக்க ஒரே ரத்தக்களறி. எப்படியோ போராடி ரபி-ஸ்வேதாவை வெளியே அழைத்து வந்து ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி டாட்டா காட்டிய போது, ஒரு ரத்தம் தோய்ந்த அரிவாள் என் முதுகில் சொருகி ரத்த ருசி கண்டது. எப்படியோ புதுமணத் தம்பதிகள் ஆபத்திலிருந்து தப்பியதை நினைத்துப் பெருமூச்சு விட்ட போது கண்கள் இருட்டியது.

இரண்டு மாத ஆஸ்பத்திரி வாசத்திற்குப் பின் ஓரளவு தேறி வந்த பின்னும், உடல் நிலை அடிக்கடி மோசமானது. ஆறேழு மாதமாய் அந்த ஆஸ்பத்திரியின் நிரந்தர உறுப்பினர் கார்டு வாங்காதது தான் பாக்கி. அடிக்கடி சுவாசக் கோளாறு வந்து, உடல் இளைத்து அட்மிட் ஆகியிருந்த என்னைப் பார்க்க வந்த ரபியின் முகத்தில் வழக்கமான ஒளியே இல்லை. முதல் திருமண நாள் முடிந்த சூட்டோடு அவளை விவாகாத்து செய்யப் போவதாக , ஏதோ சவரம் செய்யப் போவதைப் போல சாதாரணமாக சொன்னான்.

Positive Attitude கொண்ட நான், ரத்தம் தோய்ந்த அரிவாள் வெட்டினாலோ, ஏற்றிய ரத்ததினாலோ, HIV Positive என்று கண்டறியப்பட்டு , நோய்களின் கூடாரமாய்...

எதிரே நின்று வெறித்துப் பார்ப்பவனைப் பார்க்க பார்க்க வேதனையாய் இருந்தது.
கண்ணாடியை உடைத்து விடலாம் போல இருக்கிறது.

Jul 3, 2009

Body of Evidence


Killing a human in India is as easy as swatting a mosquito, mused Dr.Thomas with a cynical smile. It was 2.30 AM and he was sitting in the balcony of his scenic beachside bungalow in Chennai, amidst the cloud of cigarette smoke, listening to the rhythm of waves .His eyes
were bloodshot, thanks to the brandy and waking up all night. He has saved millions of human lives for his living and was about to take away a life for his prestigious living. Being a doctor himself, he was well aware of the autopsy procedures in Government hospitals wherein the drunken orderlies perform literally butchery.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons