Jan 28, 2009

Copy cats in Blogosphere too !



பரீட்சையில ஈயடிச்சான் காப்பி கேள்விப்பட்டிருக்கோம்
படங்களில் உலக சினிமா காப்பி பார்த்திருக்கோம்
பாடல்களிலே தேவா, ஹாரிஸ் காப்பி கேட்டிருக்கோம்
இப்பல்லாம் பதிவுகளை Control+ C பண்ணி Blog Post Copy அடிக்கிறாங்க ....



இந்த அருமையான வலைத்தளத்துக்குப் போய், உங்க ப்ளாக் அல்லது தள முகவரியை டைப் பண்ணிப் பாருங்க, பல நாள் திருடனுங்க பிடிபடுவாங்க !

இவரைப் போல ...

இங்க இருந்து சுட்டு இங்க பதிவு பண்ணிட்டாரு.
இதெல்லாம் ஒரு பொழப்பு


Related Posts:






Jan 15, 2009

Kindly bear with this



மனம் துவண்ட நேரங்களில், உள்ளம் சோர்வடையும் போதெல்லாம், வலைத்தளங்களில், மின்னஞ்சல்களில், MMSகளில் என்னை சிரிக்க வைப்பவர் வடிவேலு, விவேக் அல்ல. அவர் விஜய T. Rajendar.

அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க அடுக்கு வசனம் பேசும் போது நமக்கு சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விடும். எனக்கு தெரிந்து பக்கத்து வீட்டுக் குழந்தைகள் எல்லாம் அவர் படம் பார்த்து (பயந்து) தான் அழாமல் மம்மு சாப்பிடுகின்றனவாம்.

இப்படிப்பட்ட ராஜேந்தர் அவர்கள், மீசை தாடி இல்லாமல் எப்படி இருப்பார் என்று யோசித்த போது கைகொடுத்தது Photoshop.






Keywords: Vijaya T. Rajendar, Rajendar without beard, TR,

Other Posts:

Jan 13, 2009

God save Science from Tamil Cinema




தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்திற்கும் மேலான (சரியாக 1093) அதிசய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தாலும், அவற்றில் முக்கியமானவை இருள் விரட்டும் மின்விளக்கும், இருளில் காட்டப்படும் சினிமாவும். சினிமாவின் ஆதாரமான படச்சுருளில் தொடங்கி, ஒளி-ஒலிப்பதிவு, இசை, தணிக்கை, சுவரொட்டி அச்சிட்டு படத்தினை கொட்டகையில் ஓட்டுவது வரை பிரமிக்கத்தக்கவகையில் அறிவியல் சினிமாவுடன் கூட்டுக்குடித்தனம் நடத்தி வருகிறது. ஆனால், சினிமாவில் அறிவியல் படும் பாடு இருக்கிறதே, தொலைக்காட்சி நெடுந்தொடர்மருமகள் பாடு போல பரிதாபம் தான்.படைப்பாளிகளின் கற்பனைக் குதிரைக்கு இறக்கை கட்டிப் பறக்கும் பழக்கம் உண்டு. அந்த வேகத்தின் புழுதியில் அறிவியல் உண்மைகள் அடித்துச் செல்லப்படுவது இயற்கை தான். ஆனால், சில எல்லைகளையும் மீறி கற்பனை சுதந்திரம் என்ற பெயரில் சினிமாவில் அறிவியலை போஸ்ட்-மார்ட்டம் செய்வது வருத்தத்திற்குரியது.
தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியை சற்றே ஆராய்ந்தால், நாடகங்களின் மறுவடிவாய் புராணக்கதைகளில் தொடங்கி, பக்தியில் உருகி, மெல்ல சுதந்திர போராட்டத்திற்கு தோள் கொடுத்து, பின் சமூக சிந்தனை வண்ணம் பூசி உடன் விஸ்வரூபம் எடுத்த அறிவியல் தொழில்நுட்பங்கள் கைகோர்த்து பிரமிக்க வைக்கிறது. ஆனால் இந்த இருபத்துஒன்றாம் நூற்றாண்டிலும், கணிப்பொறி அனிமேஷன் தொழில்நுட்ப உதவியால் மூடநம்பிக்கை கொள்கை பரப்பில் ஈடுபடுவது மகா கொடுமை. ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் கணிப்பொறி உருவாக்கிய டைனேசார் போன்ற ஜந்துவை பெண் தெய்வம் வதம் செய்வது, பாம்பு கார் ஓட்டுவது, எழுத்தறிவு கொண்ட யானை என சினிமாவுக்கு குடலிறக்கம் ஏற்படுத்தும் இயக்குனர்களைபசித்த புலி புசிக்கக் கடவ.
தொன்று தொட்ட கறுப்பு-வெள்ளை திரைப்படம் முதல், டிஜிட்டல் மிரட்டல் காலம் வரை இந்த காட்சியை தவறாமல் சினிமாவில் பார்த்து வருகிறோம். பெண் கதாபாத்திரம், குறிப்பாக கதாநாயகி திடீரென வாந்தி எடுப்பாள், அல்லது மயங்கி சரிவாள். உடனே ஒரு பெட்டியோடு (அதில் என்ன தான் இருக்குமோ?) வேகநடை போட்டு வரும் மருத்துவர், மணிக்கட்டிலநாடி பிடித்து பார்ப்பார். பின்ணணியில் வீணை இசை பிரவாகமெடுக்க, அவள் கணவனைப் பார்த்து "நீங்க அப்பாவாகப்போறீங்க!" என்பார். நாடி பிடித்துப் பார்த்து இதயம் துடிக்கிறது என்று வேண்டுமானால் உறுதி செய்யலாம், hCG test இன்றி ஸ்கேன் செய்யாமல் கர்ப்பத்தை உறுதிபடுத்த முடியாது என்பது மருத்துவ ரீதியான உண்மை. நவீன மருத்துவத்திற்குசவாலாய் மீளா கோமாவில் இருக்கும் கதாநாயகி, அடிக்குரலில் கதாநாயகன் பாடும் பாடலை கண்ணாடி அறைக்குள் கேட்டு கண் விழிப்பதும், தலையணைக்கு ஊசி போடும் டாக்டர்களும் சினிமாவில் மட்டுமே சாத்தியம். நம் கலையுலக பிரம்மாக்களுக்கு நாடி பிடித்துப் பார்த்து வைத்தியம் செய்தால் தான் திருந்துவார்கள் போலும்.

கமலின் பத்து வேடங்களாலும் பற்பல சர்ச்சைகளாலும் விளம்பரப்படுத்தப்பட்ட தசாவதாரத்தின் கதைக்களமே அறிவியல் என்ற போதும், ஒப்பனைக்கும், தொழில்நுட்பத்திற்கும் கோடிகளை கொட்டியவர்கள், அறிவியல் சம்பந்தப்பட்ட பகுதிகளில்சொதப்பியிருப்பது கண்ணில் உமியாய் உறுத்துகிறது. மார்பர்க், எபோலா வகையைச் சேர்ந்த வைரஸ் வெறும் "சோடியம் க்ளோரைட்" அதாவது உப்புக்கரைசலில் சாகாது. மேலும், பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து பைனாக்குலர் போன்ற கருவி கொண்டு தரையில் நெளியும் வைரஸ்!!! கிருமியை 'பலராம் நாயுடு' கமல் பார்ப்பது வயிற்றைப் புண்ணாக்கும் அசட்டு மற்றும் அசிரத்தை படமாக்கம். மருத்துவரே செய்யத் தயங்கும் நுணுக்கமான அறுவை சிகிச்சையை 'அவதார் சிங்கின்' குரல்வளை துளைத்து வெளியேறும் துப்பாக்கி குண்டு சாதிப்பது அம்புலிமாமாத்தனம்.
வேதியியல் ஆய்வுக்கூடத்தின் பின்ணணியில் காதலையோ மோதலையோ படமாக்கினால் போதும், ஆர்ட் டைரக்டர் வரிந்துகட்டிக்கொண்டு தெலுங்கு கதாநாயகன் உடை போல பல வண்ண திரவங்களை குடுவைகளில் நிரப்பி விடுவார். அவ்வாறுகாட்டினால் தான் மக்கள் அதனை ஆய்வுக்கூடம் என்று நம்புவார்களா என்ன? மக்களின் ரசனையையும், மதிப்பீட்டுத்திறனையும் மிகக் குறைவாக மதிப்பிடுவதையே இது காட்டுகிறது.
My article published in Neythal
Related Posts:

Jan 12, 2009

Rahman bags the Golden Globes

It's time for each and every Tamilan & of course Indian to celebrate the prestigious Golden Globe award won by A.R. Rahman, with chins up. No words would match to describe this ultimate feat by Rahman, , considering especially the Hollywood's Who's Who listed fellow nominees.



Hats off Rahman Ji !

Keywords: Slumdog millionaire, A.R.Rahman Golden globes, Golden globes awards, HFPA

Jan 5, 2009

Naan Kadavul




தற்சமயம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் பாடல்களை கவனித்தீர்கள் என்றால், அப்பாடல்களின் இசையமைப்பாளர்கள் அவற்றை கருவாக்கி ??!! உருவாக்கி, மெருகேற்றி, கண்(காது) கவர் பேக்கிங்கில் வெளியிட்டுருப்பார்கள். எவ்வளவுக்கெவ்வளவு பாடல்கள் எஃப். எம். கள், டீ.வி சேனல்களிலும் CD தேயும் வரை ஒலி/ஒளிபரப்பப்படுமோ, அவ்வளவு ஹிட் என்பது கணக்கு. சென்ற ஆண்டில் வெளி வந்து பாப்பா முதல் பாட்டி வரை கவர்ந்த "வாரணம் ஆயிரம்" பாடல்களை எடுத்துக் கொள்வோம். இப்படத்தின் பாடல்களை, எந்த ஒரு இளமை ததும்பும் காதல் படத்திற்கும் உபயோகப்படுத்தலாம்.


ஒலிநாடா / CD விற்பனையை கருத்தில் கொண்டு அவசர கதியில் உருவான Fast food பாடல்கள் கொண்ட ஆல்பங்கள் வாரந்தோறும் வெளியாகிக்கொண்டிருக்க,
பாடல் இடம்பெறும் படத்தின் கதையை உள்வாங்கி, கதைக்கரு மற்றும் சூழலுடன் ஒன்றி வெளிவரும் Soundtrack தமிழில் மிகக் குறைவே.
அக்குறையை போக்க புத்தாண்டில் புத்துணர்வு பொங்க வெளிவந்திருக்கிறது "நான் கடவுள்" படத்தின் பாடல்கள்.

அன்னக்கிளி தொடங்கி இன்று வரை ஆச்சு 33 வருடங்கள். ஆனாலும், மனதை ஊடுருவும் இசையை அளிப்பதில் 'தான் கடவுள்' என்பதை மீண்டும் ஒரு முறை கம்பீரமாக நிரூபித்திருக்கிறார் ராஜா.

'நான் கடவுள்' படப்பூஜையின் போது (ஏறத்தாழ 2-3 வருடங்களுக்கு முன்), ஒரு நிருபர் பாலாவிடம் இந்தப்படத்துக்கும் இசை ராஜா தானா ? எனக் கேட்க, சற்றும் தாமதமின்றி வந்து விழுந்தது பதில். "என் படத்துக்கு அவரை விட்டால் யாரால் இசை அமைக்க முடியும்" என்று. அந்த பத்திரிக்கை நிருபர் கேட்க வேண்டும் 'நான் கடவுள்' பாடல்களை.

தன் பாடல்களை இளைய மகன் தொடங்கி, இமான் வரை முரட்டுத்தனமாக ரீ-மிக்ஸ் செய்து கொண்டிருக்க, அச்சாணி படத்திற்காக எஸ்.ஜானகி பாடிய "மாதா உன் கோவிலில்" பாடலை மீண்டும் புதிய வர்ணம் பூசி "அம்மா உன் பிள்ளை" என்ற பாடலாக தவழ விட்டுருக்கிறார். ராஜா செல்லமாய் "சாது" என்று அழைக்கும் சாதனா சர்க்கம் பாடியிருக்கும் இப்பாடல் கேட்டவுடனே 'பச்சக்' என்று மனதில் Fevikwik போட்டு ஒட்டிக்கொள்ளும் ரகம். பழைய ஜானகி versionஓடு ஒப்பிடாமல் கேட்டால் இது ஒரு அக்மார்க் ராஜா தாலாட்டு. பாடலின் இன்டெர்லூட்களில் என்ன நடக்குமோ என்ற ஆர்வத்தை தூண்டுமாறு, கதையின் ஓட்டத்திற்கேற்ற மர்ம இசை முடிச்சுகளை போட்டிருக்கிறார் ராஜா. இணைந்தே இருக்கும் இமயங்கள் ராஜா-வாலியின் கூட்டணியில், வாலியின் பேனா கசிந்துருகி பாடல் வரிகளை பிரவாகித்துள்ளது.
"மாதா உன் கோவிலில்" என்ற வரிகளுடனேயே இப்பாடல் மதுமிதா குரலில் வேறு தாளக்கட்டோடு 42 நொடிகள் மட்டுமே வந்து போகிறது.

மனதை என்னவோ செய்யும் சாரங்கி இசையோடு துவங்கி கேட்போரை அந்தரத்தில் மிதக்க வைக்கும் மெட்டு, பின்னணி இசை கொண்ட பாடல் "கண்ணில் பார்வை". ஷ்ரேயா கோஷல் என்ன புண்ணியம் செய்திருக்கிறாரோ, ராஜா அவருக்கு எப்போதுமே சிறந்த பாடல்களைப் பாடும் வாய்ப்பளிக்கிறார். அவரும் அதனை உணர்ந்து, உருகி, உணர்ச்சிப் பெருக்கோடு உயிரக் கரைய விட்டிருக்கிறார். இதே மெட்டில் அமைந்த " ஒரு காற்றில்" என்ற பாடலை ராஜா குரலில் நாள் முழுதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இப்பாடலின் மூலம், மற்ற 'Coco Cola' இசையமைப்பாளர்களிடம் இருந்து வேறுபட்டு தான் அமிர்தமாய் இசைவிருந்து படைப்பவன் என்கிறார் ராஜா.

ராஜாவின் படைப்புகளில் பலருக்குத் தெரியாத ஒரு பொக்கிஷம் 'ரமண மாலை". ரமண மகரிஷி மேல் கொண்ட பக்தியில் ராஜா தொடுத்த 'ரமண மாலை'யில் இடம்பெற்ற "பிச்சைப் பாத்திரம்" பாடலை மது பாலக்கிருஷ்ணன் இங்கு பாடியுள்ளார். ராஜாவின் தமிழ்மொழிப்புலமையை கட்டியம் கூறும் ஆழமான பாடல் வரிகள் கொண்ட இப்பாடலில், வரிகளில் சிறிய மாற்றத்தையும், பாடல் இசைக்கோர்வையில் பல மாற்றங்களையும் செய்துள்ளார் ராஜா. இப்பாடலை அமைதியான சூழலில் கண் மூடிக்கேட்டு கண்ணீர் விடாதோர் மண்ணில் பிறந்ததற்கு பதில் Marsஇல் பிறந்திருக்கலாம்.

இப்பாடல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தார் போல உள்ளது நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றும், சுண்டி இழுக்கும் மிரட்டல் பாடலான "ஓம் சிவோஹம் " என்ற சமஸ்கிருத பாடல். விஜய் ப்ரகாஷின் அற்புதமான உச்சரிப்பில், உடுக்கை ஒலி மனதை அறையும் இப்பாடல் தமிழுக்கு மிகப்புதுசு.

இளையராஜாவை விட்டால் வேறு எந்த கொம்பனாலும் இப்படி ஒரு இசையை அளிக்க முடியாது என்று மிகுந்த கர்வத்தோடு சொல்லிக் கொள்ளலாம்.

Click here to listen to the songs online.

Keywords: Naan Kadavul, Music Review, Ilaiyaraja, Bala, Arya


Related Posts:

Jan 1, 2009

Aboorva 'Kamal-Ilaiyaraja' Song


Kamal is known for his meticulous planning before stepping into a project. His scripts usually are loaded with each and every minute details that promptly help in time of picturisation.


But Kamal in one instance, did not like his earlier script of Aboorva Sahodharargal and deleted all the scenes and song picturised. Even the cast was replanned.
Check out the video of a song from the deleted version of "Aboorva Sahodharargal", that was replaced with the "Raja kaiya vachaa" song.




Click here to download the mp3 of the song (average sound quality)


Listen to the rhythm pattern of this enjoyable song resembling that of recent hit "Kathaala kannala" song from Mysskin's Anjaadhey.

Keywords: Aboorva Sahodharargal, Aboorva sagodarargal, Kamal, deleted song, Ilaiyaraja

Other Posts:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons